Friday, March 19, 2010

முதிர் கன்னி





முதிர்  கன்னி ஒருத்தி
மோட்சம் பெற போவதை
குறிப்பு ஒன்றில் குறிக்கிறாள்
இவ்வாறு ....

என் பெயரோ
மங்களம்
மங்களகரமான பெயர்
எனக்கு வயது
இருபத்தி ஆறு

மங்களம்
பெயரளவில் மட்டும் தான் !
வாழ்வில் இல்லை ...
வீட்டிற்கு - ஒரு
பெண் நான்
சுகமாய்  அனுபவித்தேன்
வாழ்க்கையை .......

வாழைபழ தோல்
வழுக்கியும் விழாமல்
 இருப்பது  - போல
விழாமலும்
அழாமலும்
இருந்தேன்  !!!

வயது பதினாறில்
பெண்ணுக்குரிய 
கன்னித்தன்மை  அடைந்தேன் ...
மாதவிடாயும்
மாதா மாதம் - வந்து
சென்று கொண்டிருந்தது  ...

மகிழ்ச்சியும்
எனக்குள்  !!
சேயாக இருந்த  - நான்
தாயாகும் காலம்
கனிந்து விட்டது -என்று
எண்ணித்தான்
மகிழ்ச்சி....
மகிழ்ச்சி....


மரத்தின்
கிளை உதிர்ந்தாலும்
மரம் கண்டுகொள்வதில்லை ....
அதுபோல தான்  - நானும்
இளமை காலம்
முடியபோவதை  - எண்ணி
எரிச்சல் இல்லை !!

காலம்
கடந்து விட்டன ....

எனக்கு  வயதோ
முப்பது .....

விடிந்த சூரியனை
விழி கொண்டு - காண
மனமில்லை  !!
இருட்டை இறுக
கட்டிக்கொள்ள ஆசை  !

ஏளனம் பேசுபவர்
ஆயிரம் ...
என்னை பற்றி ..
என்
பெண்மை பற்றி ...

பூக்காரிகாளை
வெறுக்கிறேன் ....
புடவைக்காரிகாளை
புற முதுகிட்டு -ஓட
துடிக்கிறேன் ......

எனக்கு
வயதோ  முப்பது  !!


மாராப்பு
மறைத்து  இருந்தாலும்
மானம் போகவில்லையே !!
கொள்ளை அழகு
தேகம்
என் தேகம் ...
தேடி  - கொள்ளை  கொள்ள
கொள்ளைக்காரன் -ஒருவன்
இன்னும் வரவில்லையே  .....

எனக்கு வயதோ 
முப்பது



இரண்டோ  மூன்றோ
குழந்தைகளுக்கு  தாயாகி
தங்கமாக  வேண்டியவள்  !!
தகரமாக
வீசப்பட்டு விட்டேன் !! 


இறைவா ...
எனக்கு
என்ன குறை ?
என்
கண்ணிதன்மையில் - தான்
என்ன கறை?


எனக்கு வயதோ 
முப்பது

முக்கால் பெண் - நான்
கன்னி தன்மை
இழக்காத
முதிந்த  கன்னி  - நான் !

முகத்தில்  சுருக்கம்
மூப்பு அடைய போவதை
முன் கூட்டியே  சொல்கிறது - அது 
சலனங்கள் உண்டு
வழி தவற - மனமில்லை


எனக்கு வயதோ 
முப்பது

மானம்
மார்பளவிலும் கசியவில்லை  !!
மணவாளன்
இன்னும் வரவில்லை  ....

பாரமாக நிற்கின்றேன்
சுமையாக சுற்றுகின்றேன் ....
ஈன்றவனுக்கும்
என்  பெண்மைக்கும்  !!

இறைவா....  


உன் இலக்கணத்தில்
கன்னியாக
இறப்பவளுக்கு
நரகமா ?
சொர்க்கமா ?

பாரம் தாங்காமல்
குலையை  - அதன்
குலையை மண்ணோடு
பங்கிட்டு கொள்கிறது ....
முதிர்ந்த  வாழை...

நானும்
அவ்வாறே ....
பலம் இல்லை - என்னில்
பாரமாக இருக்க
விரும்பவில்லை  ...

பரமாத்மாவே
உன்னோடு 
பங்கிட்டு கொள்கிறேன் 
என் - மோட்சத்தை  !!

இடம் - ஒன்று  ஒதுக்கு
உன்
இலக்கணத்தில் ....