Wednesday, March 31, 2010

கூலியின் வேண்டுதல் .......

ஏனய்யா கடவுளே
கல்லாயி தொலஞ்ச
கண் தொறந்து பாக்கமாட்டிய!!

படச்சது தான் படைச்ச
பாவிய
பணக்கார புள்ளையா
படைச்சிருக்க கூடாதா ?
நாலெழுத்து
படிக்க வச்சிருக்க கூடாதா?
                                      ( ஏனய்யா கடவுளே )
கூலிக்கார அப்பன தான் கொடுத்த
கொஞ்சம்
கூழ் கொடுக்குற தொழில தான்
தெரிஞ்சிருக்க கூடாதா?
நல்ல ஆத்தாள தான் கொடுத்த
ஏனய்யா இன்னும்
நாலஞ்சு வருசம் கூட வச்சிருக்க கூடாதா?
                                    ( ஏனய்யா கடவுளே )
கல்யாணம் தான் பண்ண வச்ச
பொன்  கொடுக்குற
பொஞ்சாதிய கொடுத்திருக்க  கூடாதா?
புள்ள வரம் தான் கொடுத்த
ஏனய்யா
பொட்ட புள்ளைய கொடுத்து தொலைச்ச!!
                                   ( ஏனய்யா கடவுளே )
கொடுத்தது தான் கொடுத்த
கொஞ்சம் படிக்க வச்சு கெடுத்த
கெடுத்தது தான் கெடுத்த
பாவிமக
பாடபடுத்துற பட்டணத்தில படிக்க!!
படிக்க வைக்கத்தான் ஆச
நாரபையன்
எனக்கு ஏதும் கொடுத்து
வைக்கல காச!!
                                     ( ஏனய்யா கடவுளே )
பொட்டையில் ஒண்ண
குத்த வச்சுக்க வச்ச
குடிச கட்ட
மாமன எங்க வச்ச ?
மருமகன் தான்  ஒருத்தன் வந்தான்
மகராசன்
மகளுக்கு வாழ்க்க தந்தான்
                           ( ஏனய்யா கடவுளே )
வரதட்சனையும் கேட்டுவுட்டான்
வாய்தவறி சொல்லிட்டேன்
வழி இல்லன்னு
வந்துட்டா
வாயு வவுரும ..
வாழ்க்கைய சரிகட்ட
வருமானம் இல்ல
வரிஞ்சுகிட்டு உழைக்க
வயசும் இல்ல
                        ( ஏனய்யா கடவுளே )
இன்னொருத்தியும் தான் இருக்கா
அவளும்
குத்த வச்சுக்க காத்திருக்க ..
பொண்டாட்டியும் தான் இருக்கா
பொழப்ப கெடுக்கத்தான் வந்திருக்கா
அத்தகாரியும் தான் வந்து வந்து
அழுதிட்டு தான் போறா
பெரியமனுசி
பெரிசா எதையும் கொடுக்காம போறா
                            ( ஏனய்யா கடவுளே )
பொழப்பு சிரிக்குது
மூட்ட ரெண்டு தூக்குன
பத்து ரூபா ரெண்டு தர்றான்
அதுல
முட்ட ரெண்டு வாங்கிட்டு போனா
சண்டையும் தான் நடக்குது ..
முத்தம் கித்தம் கொடுக்க முடியல
மூதேவி மக
மூஞ்சிக்கு முன்னாடி அழுவுறா
                         ( ஏனய்யா கடவுளே )
பிரியாணி வாங்கிட்டு வந்துருக்கேன்
கூடவே
விசத்தையும் கலந்து வச்சுருக்கேன்
நினச்சா
கண்ணு கலுங்குதய்யா
வவுத்துல இருக்குற புள்ள
ஆணா பொண்ணானு தெரியலய்யா
முடிவு தான்  எடுத்திட்டேன்    
மூச்சு விட துணிஞ்சுட்டேன்...
நாங்க கண்ண மூட போறோம்
இப்பவாவது
கண் தொறந்து பாருமய்யா !!

ஏனய்யா கடவுளே
கல்லாயி தொலஞ்ச
கண் தொறந்து பாக்கமாட்டிய!!