Saturday, March 27, 2010

இது சொர்க்கத்திற்கு ......!!!








ஓலைகுடிசையினிலே
ஒற்றை நிலா  வெளிச்சதினிலே
மங்கை உனக்கு
மகனாக பிறந்தேனம்மா!!
நீ
மனம் மகிழும் நேரம்
உன்
மாங்கல்யம் பறிபோனதம்மா !!

மண்டியிட்டு அழுதாயம்மா
மனம் இறங்கவில்லை
இறைவனம்மா ..
மாராப்பு விலக்கி
மகன்-எனக்கு
பசி தீர்த்தயம்மா
பஞ்சனை இன்றி
பஞ்சமின்றி !!

கிழிந்தலை உடித்தினயம்மா
செல்ல கிளி எனக்கு
கீற்று தட்டில்  சோறு இட்டயம்மா
முள்ளுகாட்டினிலே
முழங்கால் சேலை உயர்த்தி
காலனி இல்லாமல்
கால் கடுக்க உழைத்தயம்மா!!

உடுத்த உடிப்பின்றி - நீ
இருக்க புள்ளை - எனக்கு
புத்தாடை கட்டி மகிழ்ந்தயம்மா !!

பால் பருவம் ஆகிவிட்டதம்மா
பள்ளி பருவம் வந்துவிட்டதம்மா
பணக்கார பள்ளியில்
சேர்க்க  பஞ்சாலைக்கு
பயணம் செய்தாயம்மா !!
நான் கற்க - கந்து வட்டிக்கு
சீமண்ணை வாங்கினயம்மா ..

கல்லூரியில் சேர வேண்டும்
என்றுதானே உரைத்தேனம்மா ..
உயிர் உருக்கும்
உலையில்  பணி சேர்ந்தயம்மா
கல்லூரி வாசலை மிதிக்க
கந்து வட்டிகாரனிடம்
ஏசு பெற்றயம்மா

கனவுகோலோடு படிக்கின்றேனம்மா
நீ  கொடுத்த முத்த பரிசினை
எண்ணிக்கொண்டு ...
கடிதம் போட்டேனம்மா
அதை
அடுத்தவர் படிக்க கேட்டு
மனம் மகிழ்ந்தயம்மா !!

தந்தி வந்ததம்மா
தாவி ஓடினேனம்மா
தயக்கமின்றி  நம்
தலைஎழுத்தை
மாற்ற போகும்  பணத்தை தேடி !!!

அம்மா
உன் முத்து மகன்
வந்திருக்கிறேன்
உன் செல்ல கிளி வந்திருக்கிறேன்
கலெக்டராக  வந்திருக்கிறேன்
கை நெறைய காசுடன் வந்திருக்கிறேன்
கண் திறந்து பாரம்மா
 அழுகின்றான்
அந்த உயிர் அற்ற உடல் மீது !!!!