Thursday, April 1, 2010
பூப்பெய்திய தோழிகள் .....!!!!
ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம்
நாலு வயசு தான் இருக்கும்
நமக்கு
நாலு தெருவ சுத்திவருவோம்
ஆளுக்கு
நானூறு வார்த்த தான் பேசிட்டு வருவோம்
கேள்விகேட்க தான் யாருமில்ல
கேட்டாத்தான்
பதில சொல்ல நமக்கு நேரமில்ல ....
( ஏண்டி வெள்ளையம்மா )
பாண்டிதான் விளையாடுவோம்
பாதியில ஆத்தா கூப்டரான்னு
ஓடிடுவோம்
பல்லாங்குழி தான் ஆடிடுவோம்
பல்லு போன பெரிசுகிட்ட
பஞ்சாயத்து தான் பண்ணிடுவோம் ......
பாவி மக
ஆத்தகாரி தான்
பஞ்சாரத்த தூக்கிட்டுத்தான் வந்திடுவா
சுள்ளி பொறுக்க தான் அனுப்பிச்சுடுவா
( ஏண்டி வெள்ளையம்மா )
சுள்ளியும் தான் பொறுக்க போயிடுவோம்
கூடவே
சுள்ளான் ரெண்டா கூட்டிட்டு போயிடுவோம்
மாம்பழந்தான் பறிச்சுடுவோம்
அத
மாட்டிக்கமா தான் தின்னுடுவோம் ....
தண்ணி எடுக்கத்தான் சேர்ந்திடுவோம்
தேவை இல்லாதத பேசிடுவோம் ....
முறுக்கு ஒன்னுக்கு தான்
சண்ட போடுவோம்.....
மூஞ்சிய தூக்கிட்டு தான்
பிரிஞ்சுடுவோம் ..........
( ஏண்டி வெள்ளையம்மா )
பள்ளிகூடத்துக்கு தான் போயிடுவோம்
பக்கி
டீச்சர் அடிக்குரானு திட்டிடுவோம் ....
டிபன்பாக்ஸ் தான் பகிந்துடுவோம்
பச்ச புள்ளைய போல
தின்னி பண்டராம்னு தன் திட்டிக்குவோம் ....
ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....
ஆமடி சோலையம்மா
அம்புட்டும்
நாபகம் தான் இருக்கு
மனசுல
வேற யோசனை ஒன்னு ஓடிக்கிட்டுருக்கு ........
களவாண்டி தின்ன காலந்தான் போச்சு
கடத்தெருவுக்கு போற வழி
தான் மறந்து போச்சு ....
ஏண்டி சோலையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....
பரிட்சையில தான் பெயிலா போயிட்டோம்
பேபய மவ
மார்க்க கேட்டுதான் அடிச்சாணுவ.....
ஊர விட்டு ஓடலாம்னு பேசுனோம்
பொட்டபுள்ள நாம
பொழப்ப இங்கேயே ஓட்டலாம்னு
ஒட்டிகிட்டோம் ......
ஏண்டி சோலையம்மா
ஞாபகம் தான் இருக்கா ...
இல்ல
வேற யோசன தான் இருக்கா ???
அது இல்லடி
வெள்ளையம்மா
குத்த வச்சு உக்காந்து தான்
உக்காந்தேன்
மாம ஒருத்த வந்துட்டா
ஆத்தாளும் தான் பேசி முடிச்சுட்டா ...
வர்ற தைல தான்
கல்யாணமும் வச்சுட்டா.....
களவானிபைய
நம்மளத்தான் பிரிச்சுட்டான் ....
ஏண்டி வெள்ளையம்மா
பெரியமனுசி தான் ஆயுட்டோம்
சந்தோசத்ததான் தொலைச்சிட்டோம் .....
இனிமே
உன் கஷ்டம் உன்னோட ....
என் கஷ்டம் என்னோட....
Subscribe to:
Posts (Atom)

