அது
ஓர் கார்காலம் !!!
இடியின் இன்னிசையில்
மின்னலின் மிளிர்ப்பினில்
நடந்து கொண்டிருந்தேன்
நடை பாதையில்
உன் நினைவுகளை ஏந்தி கொண்டு ....
அன்பே
அது
ஓர் கார்காலம் !!!
கொட்டும் மழையினில்
கொண்டை சேவல்
நானென சிறகடித்து
ஓடிகொண்டிருந்தேன் -உன்னை மட்டும்
நினைத்து கொண்டு ....
குளிரோ
என் தேகம் -சிலிர்க்க வைக்க !!
வாகனமோ
வழிந்து கிடந்த நீரை- வாரி இறைக்க !!
கோபம் வந்தாலும்
அது
கொஞ்சல் தான்
அதுவும் கொஞ்ச நேரம் தான்
வானவில்லை பார்த்து
வாயடைத்து நின்றேன் !!!
மனதளவில்
ஒரு கண்ணதாசன் ஆகிவிட்டேன்
அந்த கணத்தினில்
இதோ ....
இதோ ....
மனதின் கண்ணதாசன்
காவியம் படைக்க -தயாராகி விட்டான்
காவியத்தில்
ஒன்று -கவிதையாய்
கவிதையென
உன்னை நினைத்து ......
நற்றினை
நடை உனது
நசுங்கி விட்டதடி
மனம் எனது ...
குறுந்தொகை
குறுஞ்சிரிப்பு உனது
குதித்து எழும்பிய
மனம் எனது ....
புறநானூறு
புன்னகை உனது
புதைந்து விட்ட
மனம் எனது ....
இன்னசை அளபெடை
இடை உனது - கணத்தில்
இடிந்து விட்டதடி
மனம் எனது ....
கலிங்கத்துபரணி
கயல் உனது
அதில்
கவிழ்ந்த மனம் எனது .....
நாலடியார்
மனம் உனது
நாணம் கொண்டதடி
மனம் எனது .....
பதிற்றுபத்து
பாசம் உனது
பாசறை கண்டது
மனம் எனது
திருவாசகம்
திருவாய் உனது
திக்கு தெரியாமல் போனதடி
மனம் எனது.....
பரிபாடல்
பரிவு உனது
பணிந்து கொண்டதடி
மனம் எனது ....
அகநானூறு
அழுகை உனது
அதிர்ந்து விட்டதடி
மனம் எனது .....
செய்யுள்
செவி உனது
அதன் பின் சென்று விட்டதடி
மனம் எனது .....
சீவகசிந்தாமணி
சிகை உனது
அதில் சிக்கி கொண்டதடி
மனம் எனது .....
இரண்டடி திருக்குறள்
பேச்சு உனது
அதில் இயங்க மறுக்கிறது
இதயம் எனது .....
ஆஹா
இலக்கணமும்
இலக்கியமும்
இடைவிடாது -இதயத்தின்
குறுக்கேயும் நெடுக்குமாய்
நெடுநல்வாடை -என
நெகிழ்ந்து கொண்டிருக்கிறது
சிலப்பதிகார
மணிமேகலை நீயடி
சிதைந்து விட்ட
கோவலன் நானடி ....
மங்கை மாதவி -நீயென
மாலை இடடி
மணவாளன் -நானென வருவேன்
உன் பின்னாலடி ....
அப்போது நினைத்து கொண்டேன்
இதையெல்லாம் தேர்வில்
எழுதி இருந்தால்
செந்தாமரையென
செங்கோல் உயர்த்தி
செந்தூரம் இட்டபடி
வென்று இருப்பேன்
தமிழில் முதல் மாணவன் -எனும் பட்டத்தை !!!
இப்போதும் மட்டும் -என்ன
தேர்வு தான் எழுதி இருக்கிறேன்
என்ற தெரிநிலை எனக்குள்
ஆம் அது காதல் தேர்வு !!
மின்சார கம்பியினில்
அழகாய் வழிந்து ஓடிய
மழை நீரின்
மின்சார பூ நீ தெரிந்ததினால்
இத்தனை
இத்தனை
இலக்கணங்களும்....
இலக்கியங்களும் ....
ஆம்
அது ஓர் கார்காலம் !!
கவிதைகள் படைத்து கண்ணதாசன்
ஆகிவிட்டேன் !!
சொல் -கண்ணே
உன் மனதினை வென்று
கண்மணி -உன் தாசன்
ஆவது எப்போது ???
ஆம்
அது ஓர் கார்காலம்
ஒவ்வொரு துளியிலும் -உன் நினைவு
ஒவ்வொரு நினைவினிலும் -என் காதல் ......


4 comments:
Nanba, ungaladhu kavidhai varigal sirappo sirappu...
Nengal thervil vetripera endhu anbaarndha vazhthukkal.
Endrum Anbudan,
White Heart Janani:-)
mikka nandri janu
All the best nanbare.. :)
mikka nandri sivaranjan nanbare
Post a Comment